Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 10, 2022

அடுத்த மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிப்பது எப்படி..?

2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II-க்கு மார்ச் மாதம் 14-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வின் பெயர்: ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்)

தகுதிகள்: தாள்-I: இதற்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பிளஸ்-2 தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தாள்-II: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர், எம்பிசி, பிசி பிரிவினர் ரூ.500, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் நாள்: தாள்-I ஜூன் 27; தாள் - II ஜூன் 28-ம் தேதி நடைபெறலாம் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.04.2022


மேலும் விவரங்கள் அறிய https://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment