JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி,எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைரீதியாக அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
பாமக உறுப்பினர் வலியுறுத்தல்:
அந்த வகையில்,பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி பேசுகையில்,யுஜிசியானது மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை நடத்துவதாக அறிவித்துள்ளது.ஆனால்,இதனை தமிழகத்தில் அனுமதிக்ககூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.
இனி நுழைவுத்தேர்வு அனுமதிக்கப்பட மாட்டாது:
இந்நிலையில்,தமிழகத்தில் இனி நுழைவுத்தேர்வு அனுமதிக்கப்பட மாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேரவையில் கூறுகையில்:
முதல்வர் எதிர்ப்பார்:
"தமிழகத்தில் நுழைவுத் தேர்வு எந்த உருவத்தில் நுழைய முயற்சித்தாலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதை தீவிரமாக எதிர்ப்பார். எனவே,தமிழகத்தில் இனி நுழைவுத்தேர்வு அனுமதிக்கப்பட மாட்டாது.அதன்படி,பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம்.
No comments:
Post a Comment