Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 6, 2022

ஜூன் 23ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று (மே 5) துவங்கியது.

தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வை 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் இதில் அடங்குவர். பிளஸ் 2 தேர்வுகள் மே 28ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'வரும் ஜூன் 23ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 

1 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 14 முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. அதன் பின்னர், ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment