மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அனைத்து இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு தொடர்பான தரவுகளின் படி , ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் மே மாதத்திற்கான பணவீக்கம் அதிகரித்துள்ளதால் ஊழியர்களின் அகவிலைப்படி 6% அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி மத்திய அரசு 6% அகவிலைப் படியை உயர்த்தி வழங்கினால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயரக்கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படையில் சம்பளத்தில் எவ்வளவு உயர்வு இருக்கும்,

அதிகபட்சம்:

ஊழியர்களின் அடிப்படை சம்பளம்- ரூ.56,900

புதிய அகவிலைப்படி (40%) = ரூ.22,760/மாதம்

அகவிலைப்படி இதுவரை (34%) = ரூ.19,346/மாதம்

எவ்வளவு அகவிலைப்படி? = 22,760-19,346 = ரூ.3,414/மாதம்

ஆண்டு ஊதிய உயர்வு 3,414 X12 = ரூ.40,968

,குறைந்தபட்சம்:

ஊழியரின் அடிப்படை சம்பளம் = ரூ.18,000

புதிய அகவிலைப்படி (40%) = ரூ.7,200/மாதம்

அகவிலைப்படி இதுவரை (34%) ரூ.6120/மாதம்

எவ்வளவு அகவிலைப்படி? = 7200-6120 = ரூ.1080/மாதம்

ஆண்டு ஊதிய உயர்வு 1080 X12 = ரூ.12,960
Share:

No comments:

Post a Comment

Categories