தமிழகத்தில், கல்லூரிகள் திறப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது; "தமிழகத்தில், ஜூலை 18-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும்.
பொறியியல் கல்லூரிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஜூலை 18-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.
அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment