Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 27, 2022

11th & 12th கையாளும் ஆசிரியர்களுக்கு 29.10.2022 CRC கூட்டம் ஒத்திவைப்பு!


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகின்ற 29.10.2022 அன்று நடைபெறும் கூட்டத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே குறுவள மையக் கூட்டம் நடைபெறும் எனவும் , பல்வேறு நிர்வாக காரணங்களால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவள் மையக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

எனவே . வருகின்ற 29.10.2022 அன்று நடைபெறவுள்ள குறுவள மையக் கூட்டத்திற்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு ( 1. தமிழ் , 2. ஆங்கிலம் . 3. கணக்கு . 4.அறிவியல் . 5. சமூக அறிவியல் ) கற்பிக்கும் ஆசிரியர்களை , தெரிவு செய்யப்பட்ட இடத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழியாக ஆசிரியர்களை குறுவள மையக் கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment