Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 4, 2022

ஆர்கிடெக்சர் படிப்பதற்கு தயாராவது எப்படி?


கட்டிடங்களையும், இதர கட்டுமானங்களையும் வடிவமைப்பது பற்றிய படிப்புதான் ஆர்கிடெக்சர்.


இது பற்றி படிப்பதுதான் பி.ஆர்க் (B.Arch.) பட்டம். இந்த படிப்பு ஐந்து ஆண்டுகள் கொண்டது. இந்த படிப்பு தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் கலந்து பயன்பாட்டில் எடுத்துக் கொண்டு, கட்டமைப்பில் எவ்வகை மாற்றங்களை கொண்டு வரலாம் என திட்டமிட்டு வடிவமைப்பை உருவாக்கப்படுகிறது.

எப்படி தயாராவது?

இந்த படிப்பில் சேர, தனியே நுழைவு தேர்வு (NATA) எழுத வேண்டும். அதில் பெறும் மதிப்பெண் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண் இரண்டில் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் டூ தேர்வு முடிந்தவுடனோ அல்லது அதற்கு முன்னதாகவோ கவுன்சில் பார் ஆர்கிடெக்சர் அமைப்பு நடத்தும், தேசிய அளவிலான திறனறிவு தேர்வு எழுத வேண்டும். இந்த திறனறிவு தேர்வு, எப்போது வேண்டுமானாலும், விண்ணப்பித்து நுழைவு தேர்வு எழுதலாம்.

பி.ஆர்க். படிக்க ஆசையா?
(B.Arch., Bachelor of Architecture)

சிறப்புமிக்க பொறியியல் படிப்புகளில் ஒன்று ஆர்கிடெக்சர் எனும் கட்டிடக்கலை படிப்பு. வளமான வேலைவாய்ப்புகள் கொண்டது.

இது என்ஜினீயரிங் படிப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும் தனித்துவம் கொண்டது. இதைப் படிக்க தனி நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

பி.ஆர்க். படிப்பு 4 ஆண்டு காலம் கொண்டது. மேலும் ஓராண்டு இன்டன்சிப் பயிற்சியும் பெற வேண்டும். மொத்தம் 5 ஆண்டு கால படிப்பு.

நேட்டா எனப்படும் தேசிய கட்டிடக்கலை திறனறித் தேர்வு மூலம் இந்த படிப்பில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர் என்பதன் சுருக்கமே நேட்டா (NATA) எனப்படுகிறது.

இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் இந்த தேர்வை நடத்துகிறது. 2018 வரை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட நேட்டா தேர்வு 2019 முதல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.

நேட்டா மற்றும் ஜே.இ.இ. மெயின் தேர்வு மூலம் பி.ஆர்க் படிப்புகளில் சேர முடியும். நேட்டா தேர்வை 5 முறை எழுதலாம். எதில் அதிக மதிப்பெண் பெறுகிறீர்களோ, அதை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

பி.ஆர்க் படிப்பில், ஆர்கிடெக்சர் டிசைன், தியரி ஆப் ஸ்ட்ரக்சர்ஸ், பில்டிங் கன்ஸ்ட்ரக்சன், பில்டிங் மேனேஜ்மென்ட், ஹிஸ்ட்ரி ஆப் ஆர்கிடெக்சர், ஆர்கிடெக்சரல் டிராயிங், பில்டிங் சயின்ஸ் அண்ட் சர்வீசஸ், ஒர்க்சாப் பிராக்டிஸ் போன்ற பாடங்கள் உள்ளன.

இளநிலை பட்டப்படிப்பு மட்டுமல்லாது 3 ஆண்டுகள் கொண்ட பி.ஆர்க். டிப்ளமோ படிப்பு உள்ளது. எம்.ஆர்க் முதுநிலைப்படிப்பும், ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன.

கட்டிடக்கலை படிப்பு படிப்பவர்கள் டேட்டா அனலிஸ்ட், கட்டிடக்கலை வடிவமைப்பாளர், கட்டிடக்கலை பொறியாளர், உள்அலங்கார வடிவமைப்பாளர், கட்டிட ஆலோசகர், தொழில்நுட்பனர், நிர்வாக அதிகாரி, கட்டிடவியல் இதழியல், கட்டிடக்கலை இயக்குனர் என பல்வேறு பணிகளையும், பதவிகளையும் வகிக்க முடியும்.

வளரும் நாடான இந்தியாவிலும், அரபுநாடுகள், அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளிலும் கட்டிடக்கலை நிபுணர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது. திறைமக்கேற்ப ஆண்டுக்கு பல லட்சம் சம்பளம் பெறலாம். விருப்பமுள்ளவர்கள் கட்டிடக்கலையியல் படிப்பை தேர்வு செய்து வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.

NATA- பி.ஆர்க். படிப்புக்கான நுழைவுத் தேர்வு:

பி.ஆர்க். (B.Arch.,இளநிலை கட்டடவியல் பொறியியல்) படிப்பில் சேருவதற்கான நாடா (NATA- National Aptitude Test in Architecture) தேசிய கட்டடவியல் திறனறித் தேர்வு) நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தேர்வை இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் (CoA) நடத்தி வருகிறது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பிளஸ்-2 படிப்பை குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் கணிதப் பாடம் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பது அவசியம்.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான கட்டணமாக ரூ. 1,800 செலுத்த வேண்டும். அடுத்த 2-வது தேர்வையும் சேர்த்து எழுத விரும்பினால் ரூ.3 ஆயிரத்து 500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ஒரு தேர்வுக்கு ரூ. 1,500 செலுத்தினால் போதுமானது. இரண்டு முறையும் தேர்வு எழுத விரும்பினால் ரூ. 2,800 செலுத்த வேண்டும்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர் ஆகிய 6 நகரங்களில் இந்தத் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதுபற்றிய விரிவான விவரங்களை www.nata.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

நுழைவு தேர்வில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை(அப்ஜக்டிவ் டைப்). இதில், பொது அறிவு வினாக்களோடு, கட்டிட கலையின் வரலாற்று சார்ந்த விஷயங்களும் கேட்கப்படும். இரண்டாவது மாணவரின் வரையும் திறனையும், கற்பனை திறனையும், சோதித்தறியப்படும் வகையிலான டிராயிங் தேர்வு

ஆர்கிடெக்ட்

உங்களுடைய படைப்பாற்றலையும், வடிவமைப்பு திறனையும் வெளிகாட்டுவதற்கு இதைவிட சரியான படிப்பு வேறு ஒன்றுமில்லை. கட்டுமானத்தை அழகுற திட்டமிடுவதும், வடிவமைப்பு கொடுப்பதும் தான். எப்படி ஒரு கவிஞன் தன்னுடைய எண்ணத்தை கவிதையாக எழுதுகிறானே, அதைப்போலவே, கட்டிட கலைஞன் தன்னுடைய கற்பனையை வரைந்து, அதற்கு உருவம் கொடுக்கும் கலைதான் கட்டிடகலை.

கட்டிடவியல் வடிவமைப்பாளர் (Architect), கட்டுமான இடத்தில் என்னென்ன புதுமைகளை புகுத்த முடியும், அதற்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு இடம் தேவைப்படும், எவ்வளவு பொருட்கள் தேவைப்படும், கட்டிடதிற்கு எவ்வளவு காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைக்கும் என்று பல விஷயங்களையும் உள்வாங்கி கட்டுமானத்தை திட்டமிடுகிறார்கள்.

இத்துறையில் புராதன கட்டிடங்கள் காப்பது, கிரீன் பில்டிங் வடிவமைப்பு, நகர வடிவமைப்பு, நகர திட்டமிடல், கட்டிட வெளி புல்வெளி அமைப்பு என பல்வேறு பிரிவுகளாக இருக்கிறது. இப்போது எங்கு பார்த்தாலும் நகரமயமாகி வருவதால் ஆர்கிடெக்சர் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. மேலும், நகரத்தில் எங்கு பார்த்தாலும் வியாபார தளங்களும், அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் என அதிகரித்து வருகின்றன. இதனால் கட்டுமான வடிவமைப்பில் வேலை வாய்ப்பு என்பது எந்த விதமான சிரமம் இல்லாமல் கிடைத்துவிடும். ஒரு குறிப்பிட்ட காலம் வேலை செய்த பின்பு, தனியே வடிவமைப்பாளராக களம் இறங்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். பெரிய அளவில் தேவை இருக்கிறது. அதே போல் வடிவமைப்புக்கு அதிகளவில் சம்பாதிக்கவும் வாய்ப்புகள் ஏராளம். குறைந்தது 5 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் வரை ஆண்டு சம்பளமாக வாங்குகிறார்கள். பழங்கால கட்டிடங்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு துறையில் கட்டுமான வடிவமைப்பு, ரயில்வே துறையிலும், இதர பொது துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. நகர கட்டமைப்பு துறையில் வேலை வாய்ப்பு பெறலாம். நகர வளர்ச்சி பிரிவு, தனியார் நிறுவனங்களும், பெரிய அளவில் உருவாகி இருக்கின்றன.

வேலைவாய்ப்பு

ஆர்கிடெக்சர் படிப்பை முடிப்பவர்கள், ஆரம்ப நிலையில் கட்டுமான நிறுவனங்களிலும், வடிவமைப்பு நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். இங்கு வேலைக்குச் சேர்ந்து உத்திகளை கற்றுக் கொண்டு, தனியே ஆலோசனை நிறுவனங்களையும், கட்டுமான நிறுவனத்தையும் தொடங்கலாம். தனியே வடிவமைப்பை உருவாக்கி தருபவராகவும் இருக்கலாம் அல்லது அரசு பணிகளுக்கு வடிவமைப்பை உருவாக்கி தரலாம், ஆசிரியர் பணிக்கும் பெரிய அளவில் தேவை இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொது பணி துறைகளில் இவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறலாம். மேலும், கட்டுமான நிறுவனங்களிலும் வாய்ப்பை பெறலாம். மேலும், ஆலோசகராகவும், கட்டுமான தொழில் முனைவோராகவும் தனியே வியாபாரம் செய்யலாம்.

மக்களின் முக்கியமான கனவுகளில் ஒன்று சொந்தமாக வீடு கட்டுவது. தற்போது இந்த கனவை பலரும் நிறைவேற்றி வருகிறார்கள். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிகவளாகங்கள், தெருக்கள், அலுவலக மற்றும் தொழில் துறை கட்டிடங்கள், விற்பனை மையங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், விமான நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற அனைத்துக்கும் கட்டிடகலைக்கும், வடிவமைப்புக்கும் முக்கியத்துவம் தர ஆரம்பித்திருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள கட்டிடத்தை மாற்றி அமைக்கவும், புதுமைப்படுத்தவும் செய்கிறார்கள். இதனால் கட்டிட கலைஞர்களுக்கு ஒய்வு இல்லாமல் பணிகள் இருந்த வண்ணம் இருக்கின்றன. கூடவே, கட்டுமான துறையின் வேகமாக வளர்ச்சியால், கட்டிடகலையும் அதன் வடிவமைப்பும் வளர்ச்சி பெற ஆரம்பித்திருக்கிறது. மேலும், நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அத்தகைய உள்கட்டமைப்பு பணிகளிலும் கட்டுமான கலைஞர்களின் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது.

அரசு துறையிலும் வேலை வாய்ப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இளநிலை கட்டிட வடிவமைப்பு படிப்பை முடித்தவர்கள், பல்வேறு துறைகளில் இளநிலை கட்டிட வடிவமைப்பாளர் பதவி பெறலாம். அதன் பின்பு பெரிய அளவில் வளர்ச்சி பெற முடியும். குறிப்பாக, அரசு துறையில் பொதுபணித்துறை, ஆர்கியாலஜி துறை, பாதுகாப்பு துறை, ரயில்வே துறை, தபால் மற்றும் தந்தி துறை, பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய கட்டுமான அமைப்பு, நகர திட்ட அமைப்பு, வீடு மற்றும் நகர மேலாண்மை நிறுவனம், தேசிய கட்டுமான கட்டிட நிறுவனம் என பல அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறலாம். இதைத்தவிர, மாநில அளவிலும் பல வித வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

தற்போது இந்த துறை வளரும் துறை என்பதால் பல கல்லூரிகளில் புதியதாக படிப்பு தொடங்கியும், தொடங்கவும் தயாராக இருக்கிறார்கள். அங்கு எல்லாம் விரிவுரையாளர் பணிக்கு செல்லவும் செய்யலாம். இதன் மூலம் தன் கற்றுக் கொண்டதை கொண்டு பல இளம் ஆர்கிடெக்குகளை உருவாக்க முடியும். பிற்கால சிற்பிகளை உருவாக்குவார்கள்.மேலும் வடிவமைப்பு கலையை பற்றி ஊடகங்களிடையே பேசுவதற்கும், எழுதுவதற்கும் கூட ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறனோடு, திட்டமிடல் திறனோடும் இருப்பது அவசியம். மேலும் வரைகலையில் வடிவமைக்கும் திறனும், ஒரு வடிவமைப்பு திட்டத்தை, முன்னரே எப்படி வடிவம் வரும் என்பதை கணிக்கும் திறனும் இருக்க வேண்டும். ஏராளமான சிக்கலான வடிவமைப்புகளை உள்வாங்கி கொண்டு, புதிய வடிவமைப்பு உருவாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் கட்டுமானத்திலும், வடிவமைப்பிலும் அனைத்து டெக்னிக்கல் விஷயங்களையும் ஆர்வத்தோடு கற்றுத்தெரிந்துக் கொள்ளக்கூடிய ஆர்வம் இருக்க வேண்டும். , சுற்றுச்சுழல் குறித்த அறிவு இருப்பதும் அவசியம். குறிப்பாக கற்பனை சக்தி, வரையும் திறன் போன்றவை அவசியம்.

No comments:

Post a Comment