Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 14, 2022

TNPSC - யின் 4 வகை தேர்வு முடிவுகள் அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி.,யின் நான்கு வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியும், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலும், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் பதவியில், எட்டு காலியிடங்களுக்கு இந்த ஆண்டு, ஏப்., 30ல் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு, வரும் 31ம் தேதி நடக்கிறது

நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியில், 29 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவ., 11ல் நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது

தமிழ்நாடு சமூக பாதுகாப்பு பணியில் அடங்கிய, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியில், 16 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஜூனில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் 31ம் தேதி நேர்முக தேர்வு நடக்கிறது

தமிழக சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பணியில், நான்கு காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்படும்.

No comments:

Post a Comment