Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 10, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.11.2022

திருக்குறள் :

பால்:அறத்துப்பால் 

இயல்:பாயிரவியல் 

அதிகாரம்:அறன் வலியுறுத்தல் 

குறள் : 36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.  

பொருள்:

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்


பழமொழி :

Better do a thing than wish it to be done.

தன் செயலைத் தானே செய்தல் அழகு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன் 

2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன்.

பொன்மொழி :

நேரம் என்பது ஒரு மாயை. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பொது அறிவு :

1. ஷட்டில் காக் விளையாட்டில் பயன்படுத்தும் பந்துகளில் எந்தப் பறவையின் இறகுகள் பயன்படுத்தப்படுகின்றன? 

வாத்து இறகு. 

2. ஐஸ் கட்டிகளை தெர்மாகோலில் வைப்பது ஏன்? 

தெர்மாகோல் வெப்பத்தையும் குளிரையும் அரிதில் கடத்தி.

English words & meanings :

Vitrics - study of glass materials. Noun. கண்ணாடி பொருட்கள் குறித்த அறிவியல்

ஆரோக்ய வாழ்வு :

முலேத்தி, எந்த கலவையிலும் உட்கொண்டால், இருமல், சளி, தொண்டை புண் மற்றும் தொண்டை நோய்த்தொற்றுகளிலிருந்து பரந்த நன்மைகள் மற்றும் நிவாரணம் கிடைக்கும். முலேத்தி குச்சிகளை எந்த கலவையும் இல்லாமல் உட்கொள்ளலாம். வேரின் ஒரு துண்டை மென்று சாப்பிடுவது இருமலில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது மற்றும் தொண்டையை சுத்தப்படுத்துகிறது.





NMMS Q :

சமணத்தின் தொடக்க காலத்தில் சமணத்துறவிகள் சமணத்தின் ___________உறுதிமொழிகளைக் கடுமையாக பின்பற்றினர்.

 விடை ஐந்து

நீதிக்கதை

பூனையும் எலியும்

ஒரு ஊரில் சக்தி என்றொருவன் இருந்தான். அவன் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் எலியைப் பிடிக்க பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தான். பூனை வந்ததும் எலிகளால் முன்புபோல தானியங்களை திருட முடியவில்லை. பூனையை விரட்ட வேண்டும் அல்லது நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று ஒரு எலி தன் கூட்டத்தினரிடம் கூறியது. அதற்கு ஒரு கிழட்டு எலி பூனை நம் ஜென்ம விரோதி. அதை நண்பனாக்கா வேண்டாம். அதை விரட்டுவதும் நம்மால் முடியாது. அதனால், நாம் வேறு இடத்திற்கு செல்லலாம் என்றது. 

கிழட்டு எலி சொல்வதைக் கேட்டு, மற்ற எலிகள் வீட்டை காலி செய்தது. ஆனால் பூனையை நண்பணாக்கி கொள்ளவேண்டும் என்று சொன்ன எலி மட்டும் போகவில்லை. எப்படியாவது பூனையை நண்பனாக்கிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடிக்கலாம் என்று அவ்வீட்டிலேயே தங்கிவிட்டது. ஒருநாள் அந்த எலியை பூனை பிடித்துவிட்டது. பூனையிடம் மாட்டிய எலி, பூனையாரே என்னை விட்டுவிடு. நான் உன் நண்பனாக விரும்புகிறேன். என்னை விட்டு விட்டால் உனக்கு தினமும் விதவிதமான தின்பண்டங்களைத் தருகிறேன். மேலும் உனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் தானே கிடைக்கிறது என்று ஆசை வார்த்தைகள் கூறியது. பூனையோ, ஏ எலியே எனக்கு பாலும், காய்ந்த ரொட்டியும் போதுமானது. நீ நாளை தரும் தின்பண்டத்திற்கு ஆசைப்பட்டு இன்று கிடைக்கும் உனது கறியை இழக்க நான் முட்டாளில்லை என்று சொல்லி எலியைக் கொன்று ருசித்து சாப்பிட்டது. 

நீதி :
எதிரிகளிடம் நியாயம் எதிர்பார்ப்பது தவறு.

இன்றைய செய்திகள்

10.11.22

* மேட்டூர் அணை உபரி நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பிவிட கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

* தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

* குரூப் 2 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சியின் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

* நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாகினர். நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவில் தலைநகர் டெல்லி, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நில அதிர்வு உணரப்பட்டது.

* மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மிக மோசமாக காற்று மாசுபாடு நிலவும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பிஹார் மாநிலத்தின் கதிஹார் முதல் இடத்தில் உள்ளது.

* இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

* தைவானுடன் தொடரும் பதற்றம்: போருக்குத் தயாராக ராணுவத்துக்கு சீன அதிபர் உத்தரவு.

* ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் நடைபெறும் தேதி, இடம் அறிவிப்பு.

* ஐசிசி டி20 தரவரிசை:  பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் சூர்யகுமார் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இரட்டையர் பிரிவில் ரஷியா-பெல்ஜியம் ஜோடி சாம்பியன்.

Today's Headlines

* In the case which requested the government to direct the extra water from Mettur dam to lakes and ponds - High Court asked the government about the steps taken

* For the small-scale industries, the TN government canceled the electric bill claimed for the current usage during the peak period of the day.

* The private medical colleges which collect more fees than the norms, approval will be canceled - warning by the Ministry of Medicine.

* In the Southern East part of the Bengal Sea a low-level atmospheric pressure is formed. This information is from Chennai Metrology Department.

In the Nepal earthquake, 6 people were killed. An echo of the earthquake is felt in India's capital and the North Eastern state of Manipur.

* The Central Pollution Control Board has released a list of cities with the worst air pollution.  Bihar's Katihar tops the list.

 * Statistics show that most foreigners living in England and Wales are Indians.

* Tensions with Taiwan continue: Chinese president orders military to prepare for war

* IPL 2023 Mini Auction Date, Venue Announcement

* ICC T20 Ranking:  India's Suryakumar has retained the top spot in the batsmen rankings.

 * Women's Tennis Championship: Russia-Belgium pair champion in doubles.
 
 Prepared by : Covai women ICT_போதிமரம்


No comments:

Post a Comment