JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தற்பொழுது காலகட்டத்தில் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பு எளிதாகவே வந்து விடுகிறது.
இதற்கு மாறுபட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கமே முதன்மையான காரணம். அவ்வாறு இளம் வயதில் மாரடைப்பு வராமல் தடுக்க இந்த பானத்தை குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை
இஞ்சி
வெந்தயம்
செய்முறை:
பலரும் உணவில் சேர்க்கும் கருவேப்பிலையை ஒதுக்கி வைப்பது வழக்கம். ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் அதிகம் என்பது தெரியாமலே போகிறது. கருவேப்பிலை ஆனது ரத்த நாளங்கள் மற்றும் அடைப்புகளை நீக்க பெரிதும் உதவுகிறது.
இஞ்சி ஆன்ட்டி ஆக்சிடென்ட் என்பதால் மாரடைப்பு வராமல் தடுக்க உதவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் ஒரு கை கருவேப்பிலை சேர்க்க வேண்டும்.
அத்துடன் சிறிதளவு இஞ்சி மற்றும் வெந்தயத்தை சேர்க்க வேண்டும். தண்ணீர் அரை கிளாஸ் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். கொதித்த பிறகு வடிகட்டி எடுத்துக்கொள்ளலாம்.
இதனை 11 நாட்கள் குடித்து வர ஆயிசுக்கும் மாரடைப்பு மற்றும் அது சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.
No comments:
Post a Comment