விரைவில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேச்சு, அரசு கல்லூரிகளில் 1,895 கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என அறிவித்தார்.

இதன்பின் பேசிய அவர், பொறியியல் முதலாமாண்டு சேர்க்கை நவம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறும். அதன்படி, அனைத்து கல்லூரிகளிலும் நவம்பர் 18-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்கள் இல்லாத வகையில் நிரப்படும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள 35 கல்லூரிகள் தேசிய அளவில் இடம் பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்ட அமைச்சர், 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோருவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என கூறினார்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories