பள்ளியில் குறும்படம் காட்ட ரூ.5.50 கோடி வசூல்!



''குறும்படம் காட்டி, 5 கோடி ரூபாயை அள்ள திட்டம் போடற கதையை கேளும் ஓய்...'' என, முன்னுரை தந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''பள்ளி மாணவர்களுக்கு நற்சிந்தனை வளரணும்கிற நோக்கத்துல, 'குழந்தைகளின் ஓட்டப்பந்தய வீராங்கனை' என்ற ஒரு குறும்படத்தை, எல்லா பள்ளி கள்லயும் போட்டுக் காட்ட அரசு உத்தரவு போட்டிருக்கு ஓய்...

''இந்தப் படம் பார்க்க, ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 ரூபாய் கட்டணம்... படத்தை திரையிட்டு காட்டி, கட்டணம் வசூலிக்க, வேலுாரைச் சேர்ந்த தனியாருக்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் அனுமதி குடுத்திருக்கா ஓய்...

''அவா ஒரு புரொஜக்டர், ஒரு பென் டிரைவுடன் பள்ளிகளுக்கு வந்து, 'படம்' காட்டிட்டு, வசூல் பணத்தை அள்ளிண்டு போயிடுவா... மதுரை மாவட்டத்துல மட்டும் எல்லா பள்ளிகள்லயும் சேர்த்து, 5.50 லட்சம் மாணவர்கள் இருக்கா ஓய்...

''தலைக்கு 10 ரூபாய்ன்னா 5.50 கோடி ரூபாய்க்கு மேல வசூலாகும்... 'ஒரு குறும்படத்துக்கு இந்த தொகை டூ மச்'னு ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கறா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.

பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel