Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, December 26, 2022

ரிஷப ராசிக்கு 2023 எப்படி? ஜோதிட ரத்னா கே.பி வித்யாதரன் கணித்த 2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

கொண்ட கொள்கையில் மாறாமலும் அனைவரிடத்திலும் விட்டுக்கொடுத்துப் போகும் பண்புகொண்ட ரிஷப ராசி அன்பர்களே...
தவறு செய்தவர்கள் யாரா இருந்தாலும் தயங்காமல் தட்டிக்கேட்கும் உங்களுக்கு வரும் 2023 ம் ஆண்டு எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம்.

உங்கள் ராசி அதிபதியான சுக்கிர பகவான் ராசிக்கு 9 ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டுபிறப்பதால் இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் புத்துணர்ச்சி தரும் ஆண்டாகவே அமையும். மனதில் இருந்த விரக்தி, கோபம் ஆகியன விலகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பூசல்கள் விலகும். நீண்ட நாள்களாகக் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது கிடைக்கும்.
சுக்கிர பகவான்

கடன்களைக் கட்டி முடிப்பீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் நிகழும். வீடு கட்டும்பணியைத் தொடங்குவீர்கள். இந்த ஆண்டு குழந்தைகள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். அவர்கள் உங்கள் விருப்பம் போல நடந்துகொள்வார்கள்.

புதன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான 8-ம் வீடான தனுசில் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே வீட்டிலும் வெளியிலும் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகளின் நட்பும் மரியாதையும் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் வாய்க்கும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவீர்கள். திருப்பணிகளுக்கு உதவுவீர்கள்.

குருபகவான் சஞ்சாரம் எப்படி?

22.4.2023 வரை குருபகவான் 11-ம் வீட்டிலே வலுவாக அமர்ந்திருப்பதால் பணவரவு அதிகரித்துக் காணப்படும். சகோதர உறவுகள் சாதகமாக இருப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மனதில் இருந்த தாழ்வுமனப்பான்மை விலகும். இதுவரை கண்டும் காணாமலும் இருந்த உறவினர்கள் தேடி வந்து உறவு பாராட்டுவார்கள். மதிப்பு, மரியாதைக் கூடும்.

23.4.2023 முதல் குருபகவான் 12-ம் வீட்டில் அமர்ந்து ஆண்டு இறுதிவரை பலன் தர இருக்கிறார். இதனால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணிச்சுமை அதிகரித்த வண்ணம் இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களோடு புதிய நட்பை ஏற்படுத்தும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். யாரையும் நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம். வீடு, மனை விற்பது வாங்குவது லாபகரமாக முடிவடையும். இறைவழிபாடுகள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியன சிறக்கும்.
குருபகவான்

சனி சஞ்சாரம் சாதகமா?

இந்தாண்டு தொடக்கத்தில் சனிபகவான் தனது சொந்த வீடான மகரத்திலேயே அமர்ந்திருக்கும் வேளையில் இந்த ஆண்டு பிறக்கிறது. ராசிக்கு 9-ம் வீட்டில் சனிபகவான் தொடர்வதால் நல்ல பலன்கள் உண்டாகும். வழக்கில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும். 29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 10 - ம் வீடான கும்ப ராசியில் அமர்ந்து பலன் தர இருக்கிறார. இந்தக் கால கட்டத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்ப்புகள் தோன்றி மறையும். நிதானம் தேவை.

ராகு - கேது

8.10.2023 வரை ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். 12-ல் சஞ்சாரம் செய்துவரும் ராகுவால் மனம் அடிக்கடி கலங்கும். தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மறையும். 9.10.2023 முதல் ராகு 11-ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் திடீர் பணவரவு உண்டாகும். வேற்றுமதம் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களால் நன்மைகள் அதிகரிக்கும். எதையும் முடிக்கும் வல்லமை மனதில் பிறக்கும். கேது 5 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் சிறு தாமதம் ஏற்பட்டு முடியும். பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
ராகு கேது

வியாபாரம்: ஆண்டு முழுவதுமே அமோகமாக லாபம் இருக்கும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்தும் திட்டம் நல்ல பலனைத் தரும். ஏப்ரல் மாதத்திற்குள் பழைய பாக்கிகள் வசூலாகும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.

உத்தியோகம்: இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பணி செய்யும் இடத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். உங்கள் கை ஓங்கும். இதுவரை நிலுவையில் இருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை தேடிவரும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து புதிய வேலை தேடிவரும். உங்கள் கோரிக்கைகளை நிர்வாகத்தினர் பரிசீலிர்ப்பார்கள்.மொத்தத்தில் இந்த ஆண்டின் முற்பகுதி மிகவும் சாதகமாக அமைகிறது. பிற்பகுதியில் அலைச்சல் அதிகரித்தாலும் பல நல்ல நிலைகளுக்கு உங்களை உயர்த்தும்.

No comments:

Post a Comment