தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மதிப்பீட்டு புலம் " பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . பள்ளிசார் மதிப்பீட்டை ( School Based Assessment ) முதன்மைப்படுத்தும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் இயங்கும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi.Tech Labs ) வழியாக கணினி வழி வினாடிவினா போட்டிகளை மேற்கொள்ளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து , தமிழ்நாட்டில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழி வினாடிவினா போட்டிகளை 13.12.2022 முதல் 16.12.2022 வரை நடத்த வேண்டும் என்று பார்வையில் காணும் கூட்டக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டது.
Tuesday, December 13, 2022
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி வழி வினாடிவினா போட்டிகளை நடத்துவதற்கான தேதி அறிவிப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment