Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 13, 2022

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள்; மறுதேதி அறிவிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கரையை கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் சென்னை பல்கலைகழகம், அண்ணா பல்கலைகழகளின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24ம் தேதியும், டிசம்பர் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31ம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment