JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கடந்த 2021-22ல் நடந்த PG TRB ல் 16.9.2022 அன்று வெளியிடப்பட்ட தெரிவு பட்டியலில் தகுதி பெற்று இருந்தும்16.9.2022 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் Maths, Economics, commerce, computer science பாடப்பிரிவுகளில் இருந்து குறிப்பாக தமிழ் வழியில் படித்த 56 தேர்வர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன இதை அறிந்த தேர்வர்கள் TRB யிடம் கேட்டப்பொழுது சரியான தகவல் அளிக்கப்படவில்லை. பின்பு தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் இவர்களுக்கு நான்கு வாரத்திற்குள் councling வைத்து நியமன ஆணை வழங்குமாறு பள்ளி கல்வி துறைக்கும் ,TRB க்கும் உத்தரவிடபட்டன.
நான்கு வாரத்திற்கு மேல் ஆகியும் பள்ளி கல்வி துறை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் கடந்த தி.மு.க ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமையை பின்பற்றாமல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புறக்கணிக்கப்பட்ட 56 தேர்வர்கள் சென் னை உயர்நீதி மன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.
No comments:
Post a Comment