Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 20, 2022

TNPSC: விரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்?

அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் தட்டச்சர், பண்டகக் காப்பாளர் உள்ளிட்ட குரூப் 4 நிலை பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 2 பேர் என்ற விகிதத்தில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கலந்தாய்வின் முடிவில் 7301 பேர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவுற்று கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் நெருங்கும் நிலையில்,அதற்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், அடுத்த ஆண்டு குரூப் 4, குரூபி 2/2ஏ, குரூப் 1 தேர்வுகள் நடைபெறாத என்று அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய குரூப் 4 முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.

முன்னதாக, குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, இந்த புதிய முறையைப் பின்பற்றி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிட இருக்கிறது

எனவே, இன்றிலிருந்து எப்போது வேண்டுமானாலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை அவ்வப்போது பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment