மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை காவல் படை உதவி (Central Reserved Police Force) சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் (எழுத்துப்பணி) பதவிக்கான ஆட்தேர்வினை நடத்துகிறது.
இந்தியாவில் வசிக்கும் ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து நேற்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அறிவிக்கப்பட்ட காலியிடங்கள்:
உதவி சார்பு ஆய்வாளர்(சுருக்கெழுத்தர்) 143 காலியிடங்கள் சம்பளம்: ரூ.29200 முதல் ரூ.92300/- வரை
தலைமைக் காவலர் (எழுத்தர்) 1315 காலியிடங்கள் சம்பளம்: ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 25/01/2023 ஆகும்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு விண்ணப்பம் பெறும் கடைசி தேதி அதாவது 25/01/2023 அன்று 18 முதல் 25 வருடங்களாக இருக்க வேண்டும் அதாவது விண்ணப்பதாரர் 26/01/1998 தேதிக்கு முன்பு அல்லது 25/01/2005 தேதிக்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிலை (10+2) அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பம் கட்டாயம் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை https://crpf.gov.in/index.htm இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment