Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 6, 2023

'இனி வாரத்துக்கு ஒருநாள் சிக்கன்'-பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவுடன் கோழி இறைச்சி வழங்கப்பட இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுடன் கோழி இறைச்சி, மற்றும் பருவகால பழங்கள் வழங்க அரசு முடிவெடுத்து அதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் தற்போது மதிய உணவுடன் தானிய வகைகள், காய்கறிகள் மற்றும் முட்டை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுகளுடன் சிக்கன் மற்றும் பருவகாலப் பழங்கள் அடுத்த நான்கு மாதங்களுக்கு வாரம் ஒரு முறை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் ஊட்டச்சத்துகள் மாணவர்களுக்கு போஷன் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment