Breaking

Friday, January 20, 2023

பிளஸ் 2 மாணவர்களுக்கு தினசரி மாதிரி தேர்வு


தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது.

பொது தேர்வுகளில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளின் மாணவர்களே அதிகம் தேர்ச்சி மற்றும் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.

அரசு பள்ளி மாணவ - மாணவியரும், அதிக தேர்ச்சியும், அதிக மதிப்பெண்ணும் பெறும் வகையில், அரசு பள்ளிகளில் சிறப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினசரி மாதிரி தேர்வு, சிறப்பு வகுப்புகள் நடத்தி, பொது தேர்வுக்கு தயார்படுத்துமாறு, ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment