Join THAMIZHKADAL WhatsApp Groups

நம் உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது .நம் உடல் சிறப்பாக செயல்படவும் ,பிளட் சர்குலேஷன் முறையாக இயங்கவும் தண்ணீர் தேவைப்படுகிறது ,மேலும் நம் கிட்னி சிறப்பாக செயல்படவும் தண்ணீர் தேவை .இந்த தண்ணீரை எந்த நேரத்தில் எப்படி குடித்தால் நம் திசுக்கள் நன்றாக வேலை செய்யும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் .மேலும் மலசிக்கல் முதல் சிறுநீர் கழிப்பது வரை நம் உடலின் நச்சுக்கள் வெளியேற தண்ணீர் அவசியம் .அதனலதான் எப்போதும் நீர்ச்சத்துடன் இருக்க சொல்கின்றனர் .மேலும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கும் குடலுக்கும் நன்மை பயக்கும் .மேலும் இவ்ளோ முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை குறைவாக குடிப்பதால் உண்டாகும் கேடுகள் பற்றி பார்க்கலாம்

1.உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதிக கழிவுகள் உடலில் தேங்குவதால் கிருமிகள் தாக்குதல், உடல் நலிவு நாளடைவில் நோய் எதிர்ப்புச் குறைகிறது.
2.தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரக செயல்பாட்டை குறைத்து சிறுநீரக செயலிழப்பு வரை ஏற்படும்.
3. போதுமான அளவு தண்ணீர் குடிக்காத போது மலம் வறண்டு இறுகி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
4.. நீர்ச்சத்து குறையும் பொழுது மூட்டுகள் பலவீனப்படும், மூட்டு கடினப்படுதல், மூட்டு வலி ஆகியவை உண்டாகி நம் மூட்டுகளை பதம் பார்க்கும் .
No comments:
Post a Comment