Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 26, 2023

100 வயது வரை நோய் இன்றி வாழ வேண்டுமா?? அப்போ இந்த விதையை மட்டும் சாப்பிடுங்கள் போதும்!!


100 வயது வரை கால்சியம் குறைபாடு இன்றி வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்..

எந்த வித வலிகளும், நோய்களும் இல்லாமல் வாழ்வதற்கு இந்த பதிவில் கூறப்படும் ஒரு விதையை மட்டும் சாப்பிட்டால் போதும். ஆம். ஆலிவ் விதையை மட்டும் சாப்பிட்டால் நம் உடலில் உள்ள பாதி வலி மற்றும் நோய் குறைந்து விடும்.

இந்த உலகில் இதய நோய் என்பது சாதாரணமாகி விட்டது. இதய நோய் என்பது 70 சதவீத மக்களுக்கு உள்ளது. இந்த இதய நோயை குணப்படுத்தும் அற்புத மருந்தாக ஆலிவ் விதை உள்ளது. ஆலிவ் விதையில் உள்ள ஒமேகா 3 ஆசிட் நம் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை அழிக்கின்றது. இதனால் இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகின்றது. இதய நோய் மட்டுமில்லாமல் பலவிதமான நோய்களையும் ஆலிவ் விதை சரி செய்கிறது.

ஆலிவ் விதையை பயன்படுத்தும் முறை.

ஆலிவ் விதையை பயன்படுத்தும் சரியான முறை என்றால் முதலில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை முளைக் கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை சாப்பிட வேண்டும். இவ்வாறு ஊற வைத்து முளைக்கட்டி ஆலிவ் விதைகளை சாப்பிடும் பொழுது உடலுக்கு பலவிதமான சத்துக்கள் கிடைக்கின்றது.

ஊற வைத்து எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் ஆலிவ் விதைகளை பொடியாக அரைத்து அதை பயன்படுத்தலாம்.

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் ஆலிவ் விதைகளை போட்டு 5 நிமிடம் வரை வறுக்க வேண்டும். ஆறிய பிறகு அதை மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து அதை பத்து நாள்கள் வரை வீட்டில் வைத்து பயன்படுத்தலாம்.

இதை ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து காலை நேரத்தில் குடிக்கலாம். அல்லது மதியம் உணவுடன் தயிரில் கலந்தும் பயன்படுத்தலாம்.

ஆலிவ் விதைகளின் பயன்கள்.

* ஆலிவ் விதைகளில் தண்ணீரில் கரையக்கூடிய பைபரும் கரைய முடியாத பைபரும் என இரண்டு பைபர் சத்துக்கள் உள்ளது. இவை நம் பெருங்குடலை பாதுகாக்கின்றது.

* ஆலிவ் விதைகள் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கின்றது.

* ஆலிவ் விதைகள் நம் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துக்கின்றது.

* ஆலிவ் விதைகளில் நல்ல கொழுப்புகள் பைபர் ஆகியவை உள்ளதால் அடிக்கடி பசி எடுக்காது.

* மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும், அஜீரணக் கோளாரால் அவதிப்படுபவர்களும் இந்த ஆலிவ் விதை பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

* ஆலிவ் விதைகளை சாப்பிடுவதால் சரும பிரச்சனைகள் சரியாவதுடன் சருமமும் பிரகாசமாக மாறுகின்றது. முகப்பரு, கரும்புள்ளிகள் கூட இல்லாமல் நமது முகம் அழகாக மாறும்.

* ஆலிவ் விதையில் இருக்கும் ஆல்ப்போளாரிக் அமிலம் நம் மூளையை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகின்றது.

* குழந்தைகளுக்கு ஆலிவ் பொடியை அடிக்கடி கொடுத்தால் குழந்தைகளின் நியாபகச் சக்தி அதிகரிக்கின்றது.

* ஆலிவ் விதை பொடியை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டால் சோர்வு, சோம்பல் பிரச்சனைகள் இருக்காது.

* ஆலிவ் விதை பொடியை சாப்பிடுவதால் உடலுக்கு அதிக அளவு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கின்றது.

* ஆலிவ் விதைப் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

* ஆலிவ் விதையை சாப்பிடுவதால் முழங்கால் மூட்டு வலி, கீழ் வாதம் ஆகிய நோய்களும் சரியாகின்றது.

* ஆலிவ் விதை வந்து மீன் சாப்பிட விரும்பாதவர்களுக்கு நல்ல ஒரு மாற்றுப் பொருளாகும். ஒமேகா ஃபேட்டி அமிலம் ஆலிவ் விதைளில் அதிக அளவு இருப்பதால் மீன் சாப்பிடாதவர்கள் இந்த விதையை சாப்பிடலாம்.

* இந்த ஆலிவ் விதைகள் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனையையும் சரி செய்கின்றது.

* ஆலிவ் விதைகள் முடி.உதிர்வு பிரச்சனைக்கும் நல்ல தீர்வாக உள்ளது. இந்த ஆலிவ் விதைகளை தினமும் எடுத்துக் கொண்டால் முடி உதிர்தல் குறைந்து முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர்கின்றது.

* ஆலிவ் விதைகள் உடலுக்கு நல்லது என்று அதிகம் எடுத்துக் கொண்டால் அதுவே உடலுக்கு சில பிரச்சனைகளை கொடுக்கும். கர்பமான பெண்கள், குழந்தைகளுக்கு.பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த ஆலிவ் விதைகளை சாப்பிடக்கூடாது.

No comments:

Post a Comment