Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 26, 2023

நுரையீரல் அலர்ஜியால் பிரச்சனையா?? ஒரு நாளில் சரி செய்ய ஆயுர்வேத மருந்து இதோ!!


நுரையீரல் அலர்ஜி காரணமாக ஏற்படும் இருமல், சளி, தும்மல், நெஞ்சு எரிச்சல், வறட்டு இருமல், அடுக்கு தும்மல், நாசி கோளாறு போன்ற நோய்களை சரி செய்ய எத்தனையோ மருந்து மாத்திரைகளை எடுத்துருப்பீர்கள். ஆனால் எதுவும் பயன் தந்திருக்காது. இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் ஆயுர் வேதிக் மருந்தை குடித்தால் ஒரு நாளில் நுரையீரல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

நுரையீரல் அலர்ஜி என்பது எதனால் வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்று நேரடியாக நுரையீரலுக்கு போகும். அது போல நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமிகள், தூசிகள் நேரடியாக முதலில் நுரையீரலைச் சென்று அடைகிறது. இதனால் சளி, இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை சரி செய்ய இந்த பதிவில் சொல்லப் பட்டிருக்கும் ஆயுர் வேதிக் மருந்தை குடித்தால் போதும். ஒரு நாளில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

இதை செய்யத் தேவையான பொருட்கள்

* பிரியாணி இலை - 2
* இஞ்சி - இரண்டு துண்டு
* கிராம்பு - 3

செய்முறை

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 200 மிலி தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு பிரியாணி இலைகளை சிறிய சிறியதாக வெட்டி அதில் போட்டுக் கொள்ளவும். பிறகு இஞ்சித் துண்டுகளை சிறிய சிறிதாக வெட்டி அந்த தண்ணீரில் சேர்க்கவும். 

பிறகு இதில் மூன்று கிராம்புகளை சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து 200 மிலி தண்ணீரானது 100 மிலி அளவு தண்ணீராக மாறி வரும் வரை கொதிக்க வேண்டும். 100 மிலி தண்ணீராக வந்த பிறகு இறக்கி ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும். 

இதை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் நுரையீரல் அலர்ஜி உங்களுக்கு எப்போது இருக்கிறது என்று தோன்றுகிறதோ அப்போது நீங்கள் இந்த ஆயுர்வேதிக் மருந்தை குடிக்கலாம். இதனால் நுரையீரலில் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ், ஃபங்கஸ், கொரோனா கிருமிகள் என அனைத்து வகையான தொற்று கிருமிகளும் வெளியேறி விடும். 

ஆஸ்துமா நோய் உள்ளவர்களும் இந்த ஆயுர்வேதிக் மருந்தை தயார் செய்து குடிக்கலாம். இந்த மருந்தை தயார் செய்து குடிப்பதால் மூச்சு திணறல், மூக்கு ஒழுகுதல், சளி, மூக்கு அரிப்பு போன்ற எந்தவித பிரச்சனையும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது.

ஆயுர் வேதிக் மருந்தில் சேர்த்திருக்கும் பொருட்களின் பலன்கள்.

பிரியாணி இலையை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனையை சரி சொய்யும். பிரியாணி இலையில் இருக்கும் நியூட்ரிஸ்னல் கொழுப்புகள் நமக்கு ஏற்படும் அலர்ஜி, வலி, வீக்கம் எல்லாவற்றிற்கும் நிவாரணம் அளிக்கின்றது. பிரியாணி இலையை எடுத்துக் கொள்வதால் நுரையீரலில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ், பங்கஸ் கிருமிகள் அழிகின்றது. இதனால் நுரையீரலில் சளியை தேக்கி வைக்காமல் நுரையீரலை பாதுகாக்கின்றது. பிரியாணி இலை நம் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை அதிகரிக்கின்றது.

இஞ்சியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இந்த இஞ்சியை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது. சிலருக்கு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும். இதனால் அடிக்கடி அவர்களுக்கு சளி இருமல் காய்ச்சல் ஏற்படும். இஞ்சி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலமடைந்து அடிக்கடி ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுக்காக்கலாம்.

கிராம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. மேலும் கிராம்பில் ஆன்டி ஆக்சிடன்ட், ஆன்டி வைரல், ஆண்டி பாக்டீரியல், ஆன்டி ஃபங்கல் போன்றவை நம் உடலில் நுரையீரலில் தேவையில்லாமல் தேங்கி இருக்கும் கிருமிகளை அழித்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை தருகின்றது.

No comments:

Post a Comment