Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 19, 2023

திருப்பதி போறீங்களா...? மே மாத தரிசன டிக்கெட் குறித்து தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட், மெய்நிகர் சேவை டிக்கெட் ஆகியவற்றை தேவஸ்தான நிர்வாகம் இம்மாதம் 20, 21, 24, 25 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் வெளியிட உள்ளது.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் வழிமுறைகளுக்கு ஏற்ற வகையில் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜூலை மாத தரிசனம்

ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் ஒரு சில சேவைகளுக்கான டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஜூலை மாத கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் இம்மாதம் 20ஆம் தேதி காலை 10 மணி முதல் 22 ஆம் தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளை, மெய்நிகர் சேவைகளாக ஆன்லைனில் தரிசிக்க வசதிகள் உள்ளன. ஜூலை மாதம் நடைபெற இருக்கும் இந்த மெய் நிகர் சேவைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 20ஆம் தேதி காலை மணி 11:30 க்கு துவங்கி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

விஐபி தரிசன டிக்கெட் பெற விரும்பும் பக்தர்கள் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தி ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி தரிசன டிக்கெட் தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்யலாம்.

ஜூலை மாதம் ஏழுமலையான் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி தேவஸ்தான வெப்சைட்டில் அங்கப் பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்களை இலவசமாக முன்பதிவு செய்யலாம். 21 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் மாற்றத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் ஆகியோர் உள்ளிட்டோர் ஜூலை மாதம் ஏழுமலையானை வழிபட தேவையான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும்.அவற்றையும் பக்தர்கள் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மே மாத தரிசனம்

மே மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இம்மாதம் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தான வெப்சைட்டில் வெளியிடப்பட உள்ளன.

திருப்பதி மலையில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 26 ஆம் தேதி காலை 10 மணி முதலும் திருப்பதியில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்ய வரும் பக்தர்கள் இமாதம் 27ஆம் தேதி காலை 10:00 மணி முதலும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மே மாதம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற இருக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரமோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை ஆகிய சேவைகளில் மெய்நிகர் அடிப்படையில் பங்கு பெற டிக்கெட்களை இம்மாதம் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கும், ஜூன் மாதம் மெய் நிகர் சேவைகளை முன்பதிவு செய்த பக்தர்கள் ஏழுமலையான வழிபடுவதற்கான டிக்கெட்டுகளை இம் மாதம் 24 ஆம் தேதி மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் www. tirupathibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன் பதிவு செய்யலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment