Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 24, 2023

வாரம் ஒரு முறை மட்டும் இந்த டீ குடித்து பாருங்கள்! உங்கள் வாழ்நாளில் எந்த நோயும் உங்களை அண்டாது!


இந்த வைத்திய முறையை பின்பற்றி வந்தால் மூட்டு வலி, முழங்கால் வலி எந்த நோயும் உங்களை அண்டாது. 65 வயதில் கூட 25 வயதிற்கு உண்டான ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும்.

1. இதற்கு முதலில் தேவையானது பிரியாணி இலைகள். இந்த இலைகள் உங்களுக்கு பல் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் சுவாச சம்பந்தமான பிரச்சினைகளை அடியோடு நீக்கும். மேலும் அதிக உடல் எடை, கொலஸ்ட்ரால், இதய பாதிப்புகள் வராமல் தடுக்கும்.

*. அதிக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பிரியாணி இலை தண்ணீரை குடித்து வரவேண்டும்.
அதற்கு முதலில் 2 அல்லது 3 பிரியாணி இலைகளை துண்டுகளாக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் காலையில் அதனை ஐந்து நிமிடங்கள் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து சூடு படுத்தவும்.

*. சோம்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது நமது ஜீரண சக்தியை அதிகரிக்கும். நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து அன்றைய நாளின் உணவை சரியான முறையில் செரிமானம் செய்து அஜீரணத்தை குறைக்கும்.

நன்றாக பிரியாணி இலை மற்றும் சோம்பு கலந்த நீர் கொதித்ததும் அதனை சிறிது ஆறவிட்டு பின்னர் வெதுவெதுப்பான சூட்டில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதனை தினமும் இரண்டு வாரங்களுக்கு குடித்து வந்தால் உடல் எடையில் நல்லதொரு மாற்றத்தை காணலாம்.

*. அதேபோல் உடலின் எந்தப் பகுதியிலோ வழிகள் மற்றும் கட்டிகள் இருந்தாலும் அதற்கு சரியானதொரு நிவாரணத்தை தருகிறது. உதாரணமாக இடுப்பு வலி, முழங்கால் வலி மற்றும் முழங்கை வலிக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.

*. அதிகமான சுகர் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சினைகளை கட்டுக்குள் வைத்திருக்கும். கெட்ட கொழுப்பவர்களை குறித்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இன்றைய சூழ்நிலைகளில் மாரடைப்பால் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்குக் காரணம் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு தான். நம் பிரியாணி இலை தண்ணீரை குடித்து வரும் பொழுது ரத்த நாளத்தின் எந்த பகுதியில் அடைப்பு இருந்தாலும் அதனை முழுவதும் நீக்கிவிடும்.

*. இந்த டிரிங்கை குடித்து வந்தால் ஞாபகம் மறதி பிரச்சனைகள் சரியாகும். மேலும் இந்த டீயானது கிட்னியில் ஸ்டோன், மற்றும் மலட்டுத்தன்மையை போக்க வல்லது.

2. இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலில் பிரியாணி இலை போட்டு கொதிக்க வைத்து அதனை விரைவில் குடித்து வர உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.

பல மாதங்களாக இந்த தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் இந்தப் பாலுடன் ஜாதிக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும். இதனால் உங்களுக்கு அந்த பிரச்சனை முற்றிலும் சரியாகும்.

மொத்தத்தில் இந்த ஒரு இலை உங்களது அனைத்து பிரச்சனைகளையும் நீக்க வல்லது.

No comments:

Post a Comment