Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 4, 2023

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு: தேர்வு முடிவுகள் மே 17-ல் வெளியீடு

தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது.

இந்த தேர்வை 9.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 தேர்வு முகாம்களில் மேற்கொள்ளப்பட்டன.

ஏப்.24-ல் தொடங்கிய இந்தப்பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இப்பணியில் 60,000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் இன்றுடன் (மே 4) முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment