Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 8, 2023

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன.

இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன.

இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது இணையவழியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் https://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின், மாற்றுத் திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவுக்கான சேர்க்கை கலந்தாய்வு (கல்லூரிகள் அளவில்) மே 25 முதல் 29-ம் தேதி வரை நடத்தப்படும்.

இதையடுத்து முதல்கட்ட பொது கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9-ம் தேதி வரையும், 2-ம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20-ம் தேதி வரையும் நடைபெறும். கடந்த ஆண்டு ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.50, எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு ரூ.2 என்று நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

நடப்பாண்டு முதல் மாணவர்கள் ஒவ்வொரு 5 கல்லூரிகளுக்கு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.50-ம், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் ரூ.2-ம் செலுத்தினால் போதுமானது என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment