Monday, July 31, 2023

10ம் வகுப்பு தேர்ச்சியானவர்களுக்கு ரயில்வேயில் 680 காலிப்பணியிடங்கள்! ஆகஸ்ட் 30 கடைசி தேதி

Railway Recruitment Cell எனப்படும் RRC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் Assistant Loco Pilot , Technician, Junior Engineer & Train Manager பணிக்கென காலியாக உள்ள 689 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Loco Pilot , Technician, Junior Engineer & Train Manager பணிக்கென காலியாக உள்ள 689 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி :

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, டிகிரி என பணிக்கு தோடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வயது வரம்பு :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 47 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம் :

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு 7th CPC Pay Level 2 முதல் 6 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Medical Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடைசி தேதி :

30.08.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது அகவே இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் இருக்கிறது மிஸ்பண்ணிடாதிங்க!

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News