Thursday, July 20, 2023

தமிழகத்தில் 1,021 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 1,021 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

கொரோனா காலத்தில் மருத்துவ உதவி செய்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

தமிழகத்தில் 1021 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், தேர்ச்சி பெற்று பணிநியமனத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நியமன ஆணை வழங்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மருத்துவ உதவி புரிந்த மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்பட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் இந்த உத்தரவை பின்பற்றாமல், தமிழகத்தில் காலியாக இருந்த 1021 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வை நடத்தியது தொடர்பாக 14 மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு நீதிமன்றம் இன்று விசாரித்ததில், தேர்வு முடிந்து பணி ஆணை வழங்குவதில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News