Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 29, 2023

பொதுப்பிரிவு மற்றும் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு தொடங்கியது

பொதுப் பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நேற்று தொடங்கியது.

2023-24ம் கல்வியாண்டுக்கான இன்ஜினியரிங் படிப்புகளில் காலியாக இருக்கும் 1,57,378 காலி இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 22ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த பொதுப்பிரிவில் வரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில், விளையாட்டு பிரிவில் 385 இடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 163 இடங்களும், முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கான பிரிவில் 137 இடங்களும் நிரம்பி இருக்கின்றன.

இதையடுத்து, பொதுப் பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நேற்று தொடங்கியது. விருப்ப இடங்களை தேர்வு செய்வது, தற்காலிக ஒதுக்கீட்டு இடங்கள் பெறுவது, அதனை உறுதி செய்வது பின்னர் இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என மாணவ, மாணவிகளுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. முதல் சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம்(ஆகஸ்டு) 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மாணவ, மாணவிகள் விருப்ப இடங்களை ஆர்வமுடன் தேர்வு செய்து வருகின்றனர். அடுத்த மாதம் 9ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை 2வது சுற்று கலந்தாய்வும், 22ம் தேதி முதல் வருகிற செப்டம்பர் மாதம் 3ம் தேதி வரை 3வது சுற்று கலந்தாய்வும் நடக்க இருக்கிறது.

No comments:

Post a Comment