Thursday, July 27, 2023

தமிழகத்தில் 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்திவைப்பு!


தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதால் அண்ணா பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

80 பொறியியல் கல்லூரிகளையும் நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், உள்கட்டமைப்பு வசதி சரியில்லாத கல்லூரிகளில் உள்ள மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும். உள்கட்டமைப்பு வசதி சரியில்லாத கல்லூரிகள் விரைந்து அவற்றை சரி செய்துகொள்ளுமாறு அண்மா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment