Friday, October 13, 2023

ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்


ரேஷன் கடைகளில் யு.பி.ஐ வசதியை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது. அதன்படி முதல்கட்டமாக இன்று (அக்.,13) முதல் சென்னையில் உள்ள கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் 1,500 கடைகளிலும், புறநகரில் 562 கடைகளிலும் இந்த வசதி அமலுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News