Subscribe Us

Thursday, October 5, 2023

பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்....


பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்

தமிழக அரசு பள்ளிகளில் 12 ஆண்டுகளாக 10ஆயிரம் ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் 11 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராடிய ஆசிரியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டு சமுதாய நலக்கூடங்களில் வைக்கப்பட்ட நிலையில், தங்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் மீண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றும் தகவல்.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் போராட்டம் தொடரும் என்று அந்தந்த ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Popular Feed