Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 7, 2023

வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லனா என்ன ஆகும்?

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அதில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

அவ்வாறு குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால் வங்கிகள் கட்டணம் விதிக்கின்றன. அந்த கட்டணங்களை நாம் கட்டாயமாக செலுத்தியே ஆகவேண்டும். ஆனால் வங்கிக் கணக்கு காலியாக இருக்கும்போது என்ன நடக்கும்?

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியும் அதற்கான தொகையை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையை விட குறைவாக இருப்பு இருந்தால் கட்டணம் விதிக்கப்படும். வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு கட்டணங்களை விதிக்கின்றன. பொதுவாக நகர்ப்புறங்களில் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் கட்டணம் குறைவாகவே இருக்கும்.

ஒரு மாதத்திற்குள் அந்தத் தொகையைப் பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக வங்கிகள் எஸ்எம்எஸ், மின்னஞ்சல் அல்லது கடிதம் அனுப்பும். வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இருப்புத்தொகையை பராமரிக்க நேரம் கொடுக்கின்றன. இது ஒரு மாதம் வரை மட்டுமே இருக்கும். இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்து அபராதம் விதிக்கும். இதுவே விதிமுறை.

குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பதில் எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ அதே விகிதத்தில் அபராதம் விதிக்கப்படும். அதாவது நிலையான சதவீதத்தின் அடிப்படையில் மட்டுமே கட்டணம் விதிக்கப்படும். இதற்காக வங்கிகள் சில அடுக்குகள் அடிப்படையில் கட்டணம் விதிக்கின்றன. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்கான அபராதம் கணக்கை எதிர்மறையாகவோ அல்லது கழிப்பதாகவோ எடுக்கக்கூடாது என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறையாகும். ஒருவேளை பணம் டெபாசிட் செய்யப்பட்ட பிறகு அதிலிருந்து தொகை பிடிக்கப்படலாம்.

No comments:

Post a Comment