Join THAMIZHKADAL WhatsApp Groups
![]() |
பானு அத்தையா |
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
விளக்கம்:
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
பொது அறிவு :
1. ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?
விடை: ஜவகர்லால் நேரு
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
பூசணிப் பூ: பூசணி பூவில் உள்ள வைட்டமின் C சத்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, இதன் மூலம் சளி மற்றும் இருமல் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
நீதிக்கதை
ஒன்றென்று உணர்ந்தால் நன்று
ஒருமுறை உடம்பின் உறுப்புகள் எல்லாம் வயிற்றின் மேல் பொறாமை கொண்டன. உணவு எங்கே இருக்கிறது? என்று கண்டு பிடிப்பவன் நான் என்றது மூக்கு. அந்த உணவை எடுப்பவன், ஆக்குபவன் நான் என்றது கை. அதை வயிற்றுக்கு அனுப்புபவன் நான் என்றது வாய். அதை அரைத்துக் கொடுப்பவர்கள் நாங்கள் என்றன பற்களும் நாக்கும். இந்த வயிற்றுக்காக நாம் இப்படிப் பாடுபடுகிற பொழுது இந்த வயிறு என்ன செய்கிறது? சுகபோகமாக இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இனி நாம் எதுவும் செய்யக் கூடாது, என வயிறு தவிர மற்ற உறுப்புகள் போராட்டத்தில் இறங்கின. உணவு இல்லை என்றால், அந்த உறுப்புகள் என்ன ஆகும்? கண்கள் பஞ்சடைந்தன. கால்கள் வலுவிழந்தன. கைகள் சோர்ந்தன. பாதங்கள் நடுங்கின. மூக்கில் மூச்சு திணறியது. இப்படி ஆனபிறகு தான் அந்த உறுப்புகளுக்கு "தாங்கள் வயிற்றுக்கு அனுப்பும் உணவில் பயன் பெறுவது வயிறு அல்ல, தாங்கள் தான்" என்ற உண்மை புரிந்தது. தங்களது அறியாமையை எண்ணி அவை வருந்தின.
நீதி : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment