JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, December 27, 2023

அரசாணை -245-- அரசு பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் முன்வைக்கப்படும் பள்ளித் தேவைகளை கண்காணிக்கவும் மதிப்பாய்வு செய்யவும் தலைமைச் செயலாளர் தலைமையில் தனி குழு....


அரசு பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் முன்வைக்கப்படும் பள்ளித் தேவைகளை கண்காணிக்கவும் மதிப்பாய்வு செய்து முறையாக நிவர்த்தி செய்யவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பல்வேறு அரசுத் துறை செயலாளர்களைக் கொண்ட மாநில அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.அரசாணை வெளியீடு.

💥அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் 14 துறை செயலாளர்கள் கொண்ட குழு அமைப்பு

📚 பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 33,500 பள்ளிகளில் சுமார் 3 லட்சம் தேவைகள் இருப்பது தெரியவந்துள்ளன

🏫 4 விதமாக (உட்கட்டமைப்பு, கற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி மேலாண்மை) தேவைகள் பிரிக்கப்பட்டு அவை பூர்த்தி செய்யப்பட உள்ளன.

அரசாணையை டவுன்லோட் செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்க...

👇👇👇👇👇

No comments:

Post a Comment