Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 20, 2024

மக்களவை தேர்தலையொட்டி யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு ஒத்திவைப்பு: தேர்வாணையம் அறிவிப்பு

யூ.பி.எஸ்.சி. தேர்வு மே மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்வானது ஜுன் மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு தேர்வாணையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment