Breaking

Wednesday, April 24, 2024

பள்ளி மாணவர்களுக்கு ஏப்.24 முதல் கோடை விடுமுறை


ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாகக் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு வெயில் மிகவும்கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பில் காலதாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. மேலும், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுவதால், அதற்குப் பின்னரே பள்ளிகள் திறக்கப்படவாய்ப்புள்ளது. அதேநேரம், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment