திருவள்ளூர்: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் உள்ள 2,256 வாக்குச் சாவடிகளில் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
வாக்குப் பதிவின் போது, தலைமை வாக்குச் சாவடி அலுவலர், வாக்குப் பதிவு அலுவலர்-1, 2 மற்றும் 3 ஆகிய பதவிகளில் பணியாற்ற 9,924 மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுமார் 30% வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு அலுவலர்-2 ஆக பள்ளி, அரசு அலுவலக காவலர்கள், அலுவலக உதவியாளர்கள், சத்துணவு மையங்களின் சமையலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
![](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/360x100_60/fetchdata16/images/37/8e/6c/378e6cf454c10469688dfb9e9d227b3767023720eca44d99474b17142f7b4291.webp)
அவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாதவர்கள். வாக்காளர் பெயர் மற்றும் இதர விவரங்களை பதிவேட்டில் எழுதி, வாக்காளர் கையொப்பம் பெறுவதற்கும், வாக்காளர் சீட்டு வழங்குவதற்கும் பொறுப்பானவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தால், வேலை எப்படி நடக்கும்? அதுமட்டுமின்றி, சுமார் 10% வாக்குச் சாவடிகளில், இந்தி மொழி மட்டுமே தெரிந்த, பாதுகாப்பு, ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாக்குப் பதிவு அதிகாரி-2-ஆக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓட்டுப் பதிவு அலுவலர்-2 பதவிக்கு எழுதத் தெரியாத பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் வாக்குப் பதிவின் போது தவறுகள், பிழைகள், காலதாமதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, முறைகேடுகளை தவிர்க்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்கு பதிவு அலுவலர்-2 பதவியில் பட்டம் மற்றும் உயர்கல்வி முடித்த ஆசிரியர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். .
No comments:
Post a Comment