Search This Blog

Sunday, June 9, 2024

இனி சனிக் கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு

0 comments
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 10 அதாவது நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமாக 210 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இந்த கல்வியாண்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment