Breaking

Tuesday, September 24, 2024

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் முகநூல் பதிவு.



தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ( டிட்டோ ஜாக் ) 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்தது.

ஆசிரியப் பெருமக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தலைமைச் செயலகத்தில் டிட்டோ ஜாக் நிர்வாகிகளுடன் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்களின் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்கள் . டிட்டோ ஜாக் நிர்வாகிகளின் கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்துள்ளோம் .

No comments:

Post a Comment