Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்றைய கால கட்டத்தில் வேலை வாய்ப்புகள் அதிகம் வழங்கும் துறைகள் என்றால் அவை பொறியியல் மற்றும் மருத்துவ துறைகளாகும். இதில் குறைவான செலவு மற்றும் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் வேலை கிடைக்கும் படிப்புகள் என்றால் அவை மருத்துவம் சார்ந்த படிப்புகளாகும். மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்களின் அடுத்த சாய்ஸ் இந்த துணை மருத்துவ படிப்புகளாகும்.
படிப்பு வகைகள்
படிக்கும் கால அளவு, கட்டணம், கிடைக்கும் சம்பளம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இவை மூன்று வகைப்படும்.
1. பட்ட படிப்புகள்
மூன்று முதல் நான்கு ஆண்டுகள் கொண்ட கீழ்கண்ட 17 படிப்புகள் மருத்துவ துறையுடன் சார்ந்த பட்ட படிப்புகளாகும்.
B.Pharm
B.P.T
B.ASLP
B.Sc Nursing
B.Sc Radiology and Imaging Technology
B.Sc Radio Therapy Technology
B.Sc Cardio-Pulmonary Perfusion Technology
B.Sc Medical Laboratory Technology
B.Sc Operation Theatre & Anaesthesia Technology
B.Sc Cardio Technology
B.Sc Critical Care Technology
B.Sc Dialysis Technology
B.Sc Physician Assistant
B.Sc Accident & Emergency Care Technology
B.Sc Respiratory Therapy
B.Optom
B.O.T
2. டிப்ளமா படிப்புகள்
இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கொண்ட கீழ்கண்ட 8 படிப்புகள் மருத்துவ துறையுடன் சார்ந்த டிப்ளமோ படிப்புகளாகும்.
Dental Mechanic
Dental Hygienist
Medical Laboratory Technology
Radio Diagnosis Technology
Radio Therapy Technology
Optometry
Pharmacy
Medical Record Science
3. சான்றிதழ் படிப்புகள்
6 மாதம் முதல் ஓராண்டு கால அளவு கொண்ட கீழ்கண்ட 16 படிப்புகள் மருத்துவ துறையுடன் சார்ந்த சான்றிதழ் படிப்புகளாகும்.
Cardio Sonography Technician
ECG/Tread Mill Technician
Pump Technician
Cardiac Catheterisation Lab Technician
Emergency Care Technician
Respiratory Therapy Technician
Dialysis Technician
Anesthesia Technician
Theatre Technician
Orthopedic Technician
Audiometry Technician
Hearing Language and Speech Technician
Clinical, Therapeutic, Nutrition & Food Service Management Technician
E.E.G./E.M.G. Course Technician
Multi-Purpose Hospital Worker Course
Medical Record Technician
சேர்க்கை முறைகள்
அரசு கல்லூரிகள் மற்றும் அரசு பயிற்சி நிலையங்களில் உள்ள பட்டம், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் பயிற்சிக்கான சேர்க்கை இடங்கள் யாவும் +2 வில் மாணவர் பெற்ற மதிப்பெண் கட்ஆப் அடிப்படையில் சேர்க்கப் படுகின்றனர். ஆனால் பட்ட படிப்புகளுக்கு தனியாகவும், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு தனியாகவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு கல்லூரிகளை பொறுத்தவரை பட்ட படிப்புகளுக்கு Rs.3000 என குறைந்த கட்டணமே வசூலிக்கபடுகிறது. ஆனால் இதற்கான போட்டி கடுமை என்பதாலும் மொத்தமுள்ள சுமார் 1700 சீட்டுகளுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் விண்ணப்பிப்பதால் உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர்க்கை பெற இயலும். தனியார் கல்லூரிகளில் உள்ள மொத்தம் சுமார் 10,000 பட்ட படிப்பு இடங்களில் நர்சிங், பார்மசி மற்றும் பிசியோதெரபி படிப்புகளுக்கு மட்டும் அரசு ஒதுக்கீடு உள்ளது. இப்படிப்புகளுக்கு அரசு நிர்ணய கட்டணம் சுமார் Rs 40,000 மட்டுமே. ஆனால் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் Rs1,00,000 வரை கட்டணமாக வாங்கப்படுகிறது.
நர்சிங் மற்றும் பார்மசி பாடத்தில் பட்டம் மற்றும் டிப்ளமோ படிப்புகள் அதிக எண்ணிக்கையில் தனியார் சுயநிதி கல்லூரிகளிலும் பிற படிப்புகள் குறைவான தனியார் கல்லூரிகளிலும் நடத்தப்படுகின்றன. இவற்றில் நர்சிங், BPT மற்றும் பார்மசி பட்ட படிப்புகளுக்கு மட்டும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்க படுகின்றனர். அதே போல் அரசு கல்லூரிகளில் உள்ள டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு கவுன்சலிங் மூலம் மாணவர் குறைந்த கட்டணத்தில் சேர்க்கபடுகின்றனர்.
தனியார் கல்லூரிகளில் மீதமுள்ள பட்ட படிப்புகளுக்கும், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இல்லை என்பதால் மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தியே சேர வேண்டும்.
வேலை வாய்ப்புகள்
மருத்துவ துறை உயிர் காக்கும் துறை என்பதால் இந்தியாவில் மருத்துவமனைகளும், மருத்துவ சிகிச்சைகளும் உலக தரத்தில் வளர்ந்துள்ளன. மேலும் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் அதிக மருத்துவமனைகளும், மருத்துவ பணியாளர்களும் தேவைப்படுகின்றனர். உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மருத்துவ கட்டணங்கள் குறைவு என்பதால் வெளி நாட்டினர் பலரும் மருத்துவ சிகிச்சை பெற இந்தியா வருகின்றனர். எனவே இந்தியாவில் மருத்துவர்களுக்கு இணையாக மருத்துவ பணியாளர்கள் தேவை படுகின்றனர்.
எனவே நகரங்கள் மட்டுமின்றி கிராமங்கள் வரை துணை மருத்துவ படிப்பு படித்தவர்கள் தேவை அதிகம் உள்ளது. மேலும் வெளி நாடுகளில் இந்தியா நர்ஸுகளுக்கு அதிகம் வேலை வாய்ப்புகள் உள்ளன. மருத்துவ துறையில் பட்ட படிப்புககளுக்கு மட்டுமின்றி டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கும் தேவை அதிகம் உள்ளது. மருத்துவமனைகள் மட்டுமின்றி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் இப்படிப்புகளுக்கு வேலை வாய்ப்பு உள்ளது.
பிற துறைகள் போல் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு காத்திருக்கும் நிலையோ அல்லது அரசு பணியை மட்டும் தேடிடும் நிலையோ இப்படிப்புகளுக்கு இல்லை. சுருங்க கூறின் இப்படிப்புகள் படித்தோர் படிப்பை முடித்த அடுத்த ஆண்டு ஏதாவது ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர முடியும் என்ற நிலை தற்போது வரை உள்ளது.
கவனிக்க வேண்டியவை
வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால் சேர்க்கைக்கு முன் கீழ்கண்டவற்றில் மாணவர்கள் கவனம் கொள்வது அவசியம்.
400 மதிப்பெண்ணுக்கு கூடுதலாக +2 வில் பெற்ற மாணவர்கள் பட்ட படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டு அடிப்படையில் அரசு கல்லூரிகளில் ஏதாவது ஒரு பயிற்சியில் சேர வாய்ப்பு கிடைத்தாலும் சேர்ந்து கொள்ளலாம். ஏனெனில் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஒரு வேலை கவுன்சலிங் மூலம் இடம் கிடைக்காது என தெரிந்தால் நர்சிங் மற்றும் பார்மசி படிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து சுயநிதி கல்லூரிகளில் சேரலாம்.
படிப்பிற்கு ஆகும் செலவை கணக்கிட்டு தம்மால் இயலும் படிப்பில் சேர வேண்டும்.
சேரும் கல்லூரி அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதை உறுதி செய்து பின்னரே சேர வேண்டும்.
கட்டணம் சற்று அதிகம் செலுத்தினாலும் தரமான பெயர் பெற்ற கல்லூரிகளில் சேர்ந்தால் பெரிய மருத்துவமனைகளில் எளிதில் வேலை கிடைக்கும்.
உள்ளூர்களில் குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் சேர வேண்டாம். ஏனெனில் இவை பெரும்பாலும் முறையான அரசு அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படுகின்றன. இங்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் வேலை பெற பயன்படாது. மேலும் அரசு பணிக்கு செல்ல இவை உதவாது.
புதிய கல்லூரிகளில் சேருவதாயின் அவற்றின் அங்கீகாரத்தை சரி பார்த்து பின்னரே சேர வேண்டும்.
நகர கல்லூரிகளில் படித்தால் எளிதில் வேலை வாய்ப்பு பெறலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் விசாரித்து சிறந்த தரமான கல்லூரியில் சேர்வது சிறந்தது.
மருத்துவம் சேர முயற்சித்து இடம் கிடைக்காத மாணவர்கள் அரசு கல்லூரிகளில் இப்படிப்புகளில் சேர இடம் கிடைத்தால் கண்டிப்பாக சேரலாம். ஏனெனில் அரசு பணி உத்திரவாதத்துடன் மருத்துவருக்கு அடுத்த சம்பளம் பெறும் வாய்ப்பு இப்படிப்புகளுக்கு உள்ளது என்பது இன்றும் தொடர்கிறது.
No comments:
Post a Comment