JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

பள்ளிக் கல்வி- போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு - போதை எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகள் - 2025-26 மாணவர்களுக்கான (9 முதல் 12ஆம் வகுப்பு) புத்தாக்க பயிற்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் ...
போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான சமூக விழப்புணர்வு வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன . அதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்துவகை பள்ளிகளிலும் , 6 முதல் 12 வகுப்பு பயின்றுவரும் மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்தல் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட போதை எதிர்ப்பு மன்றங்கள் ( Anti - Drug Clubs ) அமைக்கப்பட்டுள்ளன . பார்வை ( 1 ) ல் காணும் அரசாணையில் போதை எதிர்ப்பு மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது . அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு போதை எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகளை 2025-26 ஆம் கல்வி ஆண்டில் செயல்படுத்திய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஆணை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Anti drug circular signed copy 03.06.2025.pdf
👇👇👇
No comments:
Post a Comment