JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் விடுவித்தல் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்கள் / அரசு / அரசு உதவி பெறும் உயர் , மேல்நிலைப் பள்ளிகளில் பணிப்புரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் / ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அவர்தம் பணியிலிருந்து ஓய்வு பெற்று , ஓராண்டு கடந்த பின்னரும் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்படாமல் இருந்து வருவதாக தெரிய வருகிறது . எனவே , மேற்கண்ட காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும்.
உடனடியாக அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் பெற்று வழங்க சார்ந்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செயல்பட தெரிவிக்கப்படுகிறது
DSE - Audit General Instruction for NOC
No comments:
Post a Comment