🍒🍒ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வு முடிவுகள் வெளியீடு.
👉TNTET 2025 : ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
🌹👉TET paper 1
👉தேர்வு எழுதியோர் =91072
👉தேர்ச்சி பெற்றோர் =44770(49.16%)
👉தேர்ச்சி பெறாதோர் =46032(50.84%)
🌹👉TET paper 2 -
👉Social Science
👉தேர்வு எழுதியோர் =142861
👉தேர்ச்சி பெற்றோர் =32554 ( 22.8 %)
👉தேர்ச்சி பெறாதோர் =110307 ( 77.2 % )
🌹👉TET paper II -
👉கணக்கு மற்றும் அறிவியல்
👉தேர்வு எழுதியோர் =186878
👉தேர்ச்சி பெற்றோர் =71608 ( 38.3 %)
👉தேர்ச்சி பெறாதோர் =115270( 61.7 %) 🌹👉TNTET CERTIFICATE
02.02.2026 பி.ப முதல் தகுதி பெற்றவர்கள் தங்களது
தகுதிசான்றிதழ் (e-certificate) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்www.trb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
🍒🍒வருமான வரியால் சம்பள பட்டியலில் குழப்பம் - அரசு ஊழியர்கள் புலம்பல்.
(நாளிதழ் செய்தி)
🍒🍒ஈராசிரியர் பள்ளிகளில் அவசர விடுப்பு எடுக்க முடியாத தலைமையாசிரியர்கள் - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் புது சர்ச்சை(நாளிதழ் செய்தி)
🍒🍒அரசு பள்ளியில் PTA தலைவர் கொடியேற்றியதால் சர்ச்சை - தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்க சேலம் CEO உத்தரவு.(நாளிதழ் செய்தி)
🍒🍒‘ஸ்கிரைப்’ நியமன அறிவிப்பால் பள்ளி ஆசிரியர்கள் கொந்தளிப்பு - பொதுத்தேர்வை கேலிக்கூத்து ஆக்குவதாக குற்றச்சாட்டு
🍒🍒பொதுத்தேர்வுகளில் 'ஸ்கிரைப்' பணிக்கு கல்லுாரி மாணவர்கள் - தேர்வுத்துறைக்கு பெற்றோர் எதிர்ப்பு
(நாளிதழ் செய்தி)
🍒🍒+2 பொதுத்தேர்வு பெயர்ப் பட்டியலில் சேர்க்கை / நீக்கம் - கூடுதல் கால அவகாசம் வழங்கி அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.
🍒🍒PGTRB நேரடி நியமனம் - முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (HS) உத்தரவு.
🍒🍒தமிழகத்தில் 'டெட்' தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு: பாதிப்பில் பொதுப் பிரிவினர் - இதுதான் சமூக நீதியா என கொதிப்பு
(நாளிதழ் செய்தி)
🍒🍒கல்வி உதவித் தொகை வழங்க முதல்வரின் திறனாய்வுத் தேர்வு: தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது.
🍒🍒டிட்டோஜேக் & பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடன் நேற்று நடைபெற்ற சந்திப்பு பற்றிய விவர அறிக்கை வெளியீடு.
🍒🍒10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Sample Question Papers) தொகுப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
🍒🍒"அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனிக் கழிப்பறைகளை ஏற்படுத்தி தர வேண்டும்"
-உச்ச நீதிமன்றம் உத்தரவு
தனிக் கழிப்பறை
“அனைத்து தனியார், அரசுப் பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு தனிக் கழிப்பறைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கட்டாயம் தனித்தனி கழிப்பறை இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” -உச்ச நீதிமன்றம் உத்தரவு
🍒🍒"மாதவிடாய் சுகாதாரம் என்பது பெண்களின் அடிப்படை உரிமை.."*
அனைத்துப் பள்ளி மாணவிகளுக்கும் இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும் என நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு.
“மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமை..”
மாதவிடாய் சுகாதாரம் என்பது அரசியலைப்புப் பிரிவு 21-ன் படி பெண்களின் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு நாப்கின்கள் இலவசமாக வழங்குவதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம்| உத்தரவு. நாப்கின்களை இலவசமாக வழங்கத் தவறும் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை.
🍒🍒தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5ம் தேதி
12 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.
🍒🍒பிப்ரவரி 3வது வாரம் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி
🍒🍒பொன்னியின்
செல்வன் -1 படத்திற்காக விருதை ஏற்பதில் மிகுந்த பெருமையடைகிறேன் - தமிழ்நாடு அரசுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நன்றி
🍒🍒2027ல் ககன்யான் திட்டம்"
"ககன்யான் திட்டம் 2027ல் திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு அமைப்பையும் தகுதிப்படுத்த வேண்டும்"
சென்னையில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பேட்டி
🍒🍒"இந்தியாவில் நிபா வைரஸ்"
"மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி; பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 196 பேர் கண்காணிப்பில் உள்ளனர்
புதிதாக யாருக்கும் நிபா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை, இந்தியாவில் நிபா பரவல் குறித்து கண்காணித்து வருகிறோம்"
-உலக சுகாதார அமைப்பு
🍒🍒திமுக யாருடைய பலத்திலும் இல்லை.
எங்கள் பலத்தில்தான் தேர்தலை சந்திக்கிறோம்.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் முரண் இல்லை.
அமைச்சர் மனோ தங்கராஜ்
🍒🍒போர் நிறுத்தம் - புதின் ஒப்புதல்"
"கடுமையான பனிப்பொழிவை கருத்தில் கொண்டு உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரத்திற்கு நிறுத்திவைக்க ரஷ்யா ஒப்புதல்; தாக்குதல் நடத்த வேண்டாம் என்கிற எனது கோரிக்கையை புதின் ஏற்றுக்கொண்டுள்ளார்"
அமெரிக்க அதிபர் டிரம்ப்
🍒🍒ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4800 சரிந்து ரூ.1,29,600க்கு விற்பனை
🍒🍒பீகார் அரசு ஊழியர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகள் தொடங்க இனி உயரதிகாரிகளின் அனுமதி தேவை
ஃபேக் ஐ.டி. கூடாது, அரசின் இலச்சினை, அரசுப் பதவிகளை ரீல்ஸ், புகைப்படத்தில் குறிப்பிடக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் வர உள்ளன
🍒🍒டெல்லியில் சந்திப்பின்போது கனிமொழி, ராகுல் காந்தி என்ன பேசினார்கள் என தெரியவில்லை, என்ன பேசினார்கள் என சொல்வது நாகரிகமாக இருக்காது; கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது தொகுதிகள் குறித்து சொல்வோம்"
-தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை
🍒🍒பேரம் பேசவில்லை’’
"2026 தேர்தல் முடிவுகள் தேமுதிகவிற்கு சாதகமாக இருக்கும். தேமுதிக உடன் கூட்டணி வைப்பவர்கள்தான் ஆட்சி அமைப்பார்கள்
2 பக்கமும் கூட்டணி பேசுவதாக கூறுவதில் உண்மை இல்லை. தேமுதிக யாருடனும் கூட்டணி பேரம் பேசவில்லை; கூட்டணி குறித்து யோசித்துதான் முடிவெடுப்போம். தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் தான் கூட்டணி"
-பிரேமலதா விஜயகாந்த்
🍒🍒துணை முதலமைச்சர்
மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு பதவி ஏற்கிறார்!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராகவும் இன்று காலை அவர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்.
🍒🍒என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் உலக கோப்பை என்றாலே அது, 50 ஓவர் உலக கோப்பை மட்டும்தான்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இதற்கு ஈடாக, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் டி20 வெர்ஷனுக்கு 'உலக கோப்பை' என்ற அந்தஸ்து தரக் கூடாது.
'THE WORLD T20' என அழைப்பதே சரியாக இருக்கும்
-சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கிரிக்கெட் வர்ணனையாளர்
🍒🍒திமுக - காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது;
பேச்சுவார்த்தை முடிந்தவுடன் தலைவர் முறையாக அறிவிப்பார்
திமுக எம்பி கனிமொழி
🍒🍒போராட்டங்களை கொச்சைப்படுத்துவது என்பது திமுக அரசாங்கத்தின் நோக்கம் அல்ல:
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
🍒🍒இஸ்லாமிய மக்களுக்கான முதலமைச்சரின் அறிவிப்புகளை வரவேற்ற SDPI
முதலமைச்சரின் அறிவிப்புக்கு SDPI நன்றி
“உலமாக்களுக்கான ஓய்வூதியம் உயர்வு, இருசக்கர வாகன மானிய உயர்வு, கோவையில் புதிய வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கதக்கவை.முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதேவேளையில் சிறைவாசிகள் விடுதலை, இடஒதுக்கீடு உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”- நெல்லை முபாரக், SDPI மாநில தலைவர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்
&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926



No comments:
Post a Comment