Breaking

Saturday, January 17, 2026

உடற்பயிற்சி செய்யும் போது, நமது உடல்


உடற்பயிற்சி செய்யும் போது, நமது உடல் “எக்ஸ்ட்ராசெல்யுலர் வெசிக்கிள்ஸ்” (Extracellular Vesicles) என்று அழைக்கப்படும் மிக மிக சிறிய பைகள் போன்ற துகள்களை இரத்தத்தில் வெளியிடுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த சிறிய துகள்கள், மூளையில் புதிய நரம்பு செல்கள் (brain cells) உருவாக முக்கிய பங்கு வகிக்கலாம் என்று ஆராய்ச்சி சொல்கிறது.

எலிகளில் நடந்த ஆய்வு

சுதந்திரமாக ஓடிய (உடற்பயிற்சி செய்த) எலிகளில் இருந்து இந்த வெசிக்கிள்ஸ்களை விஞ்ஞானிகள் சேகரித்தார்கள்.

அவற்றை உடற்பயிற்சி செய்யாத மற்ற எலிகளுக்கு செலுத்தினார்கள்.

அதனால், அந்த எலிகளின் மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் (நினைவு மற்றும் கற்றலுக்கு முக்கியமான பகுதி) பகுதியில்

புதிய நரம்பு செல்கள் சுமார் 50% அதிகமாக உருவானது.

இந்த சிறிய துகள்களில் என்ன இருக்கிறது?

இந்த வெசிக்கிள்ஸ்களில்:

புரதங்கள் (Proteins)

கொழுப்புச் சத்துக்கள் (Lipids)

மரபணு தகவல்கள் (Genetic material)

இவை எல்லாம் சேர்ந்து, மூளையில் உள்ள ஸ்டெம் செல்களை தூண்டி, அவை புதிய நரம்பு செல்களாக மாற உதவுகின்றன.

ஏன் இந்த கண்டுபிடிப்பு முக்கியம்?

உடற்பயிற்சி செய்யாமலே,

இந்த வெசிக்கிள்ஸ்கள் மட்டும் இருந்தாலே புதிய மூளை செல்கள் உருவானது என்பது மிக முக்கியமான விஷயம்.

ஆய்வாளர்கள் கூறுவதுபடி:

உடற்பயிற்சி செய்யும் போது, தசைகள் (muscles) மற்றும் கல்லீரல் (liver) போன்ற உறுப்புகள் இந்த துகள்களை வெளியிடுகின்றன.

அவை இரத்தத்தின் மூலம் மூளைக்கு சென்று தாக்கம் செய்கின்றன.

ஆனால்:

இந்த துகள்களில் உள்ள எந்த குறிப்பிட்ட பொருள் இந்த வேலை செய்கிறது?

அவை எப்படி மூளைக்குள் நுழைகின்றன?

என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை.

No comments:

Post a Comment