Subscribe Us

Wednesday, January 14, 2026

போராடும் இடைநிலை ஆசிரியர்களை வேறு மாவட்டத்திற்கு கடத்தும் காவல்துறை - கண்டு கொள்ளாத கல்வி அமைச்சர்!!!!!


*பொங்கல் சமயத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இனிமையான தருணத்தில் திமுக ஆட்சியில் ஊதிய பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சென்னையின் தெருக்களில் கோஷமிட்டு விண்ணை அதிர செய்வது நல்லாட்சிக்கான சான்றாக அமையாது என்பதை உணர்ந்த திமுக அரசு போராடும் இடைநிலை ஆசிரியர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு அப்புறப்படுத்துகிறது.*

*கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக போராட்டத்தை மழுங்கடிக்க செய்வதையே திமுக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.*
*நீங்கள் கன்னியாகுமரியில் கொண்டு சென்று விட்டாலும் அடுத்த நாள் சென்னையில் வந்திறங்கி முன்பை விட வீரியமாக கோசமிடுவோம். வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம் .இறுதி வெற்றி நமதே*💪🏻

SSTA

No comments:

Post a Comment

Popular Feed