
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில், ‘பொதுத்தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இருக்காது’ என அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (பிப்.16) விளக்கமளித்துள்ளார். மேலும், “பொதுத்தேர்வுக்கு பின்பே தேர்தல் வருதால், தேர்வு பணிகளில் ஆசிரியர் பணியாற்றுவதில் எந்த பாதிப்பும் இருக்காது. தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே பொதுத் தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டது” என்றார்.



No comments:
Post a Comment