TET - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டுமா?

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டுமா? எழுத வேண்டும் எனில் எந்த தாள் எழுத வேண்டும்?*

1 9 1970க்கு பின் பிறந்த நாளைக் கொண்டு தற்பொழுது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியில் இருக்கும் அனைவரும் பணியில் தொடர தகுதித் தேர்வு தாள் ஒன்று எழுதி வெற்றி பெற வேண்டும்

1 9 2025 முதல் 31 8 2030 வரை பணி ஓய்வு பெறக்கூடிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் தொடர தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை

ஆயினும்

அரசாணை 243 இன் படி பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற
அவரவர் இளங்கலையில் பெற்ற பட்டத்தின் அடிப்படையில் தாள் 2
எழுத வேண்டும்

சுருங்க கூறினால்

01.09.1970 க்கு பின்னர் பிறந்து தற்பொழுது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் பணியில் தொடர தாள் ஒன்றும்

பதவி உயர்வுக்கு தாள் இரண்டும் எழுத வேண்டும்.

ஐந்தாண்டு பணிக்காலம் உள்ளவர்கள், பணியில் தொடரவும் ஆனால் பதவி உயர்வில் விருப்பமில்லாதவர்களும் எந்த தேர்வும் எழுத வேண்டாம்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel