Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 9, 2026

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் வழிமுறைகள் வெளியீடு


10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்புக்கு மார்ச் 11-ம் தேதி முதல் தேர்வு தொடங்குகிறது. பொதுத்தேர்வு மையங்களை மேற்பார்வையிடுவதற்காக முதன்மைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் வினாத்தாள்களை பாதுகாத்தல், தேர்வறை, சிசிடிவி கண்காணிப்பை உறுதிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில், முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதலாக சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்

பட்டுள்ளன. அதன்படி, தேர்வு மையத்தில் பணிபுரியும் முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர், நிலையான படை உறுப்பினர், துறைஅலுவலர் உட்பட அனைத்து பணியாளர்கள் நியமன ஆணையை ஆய்வு அலுவலர் கேட்கும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

செல்போன் பயன்பாட்டு உறுதிமொழி சான்று தேர்வு முடிந்த பின்னர் பெறப்பட வேண்டும். அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அன்றைய தேர்வுக்கான பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மாணவர் உடல்நலன்: தேர்வெழுதும் மாணவருக்கு அம்மைநோய் இருப்பின், அவர் தேர்வெழுத தனியாக ஒரு அறையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் அதில் கூறப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment